search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்யன் கான் வழக்கு"

    போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் என்.சி.பி. மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறது.
    சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பொருள் விருந்தில் கலந்து கொண்டு பொதை பொருள் பயன்படுத்தியதாகவும், போதை பொருள் வைத்திருந்ததாகவும் தேசிய பொதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

    என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீன் உத்தரவு குறித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் விவரம் முழுவதுமாக வெளியானது. அதில் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யான் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக என்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ஆய்வு செய்தபிறகு, சட்டப்பூர்வமான கருத்துகளை தற்போது எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
    ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் விமர்சனத்திற்கு உள்ளாகிய என்.சி.பி. மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயின் குடும்பத்தினர் இன்று கவர்னரை சந்தித்தனர்.
    ஷாருக்கான் மகன் ஆர்யான் சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் முக்கிய அதிகாரியாக என்.சி.பி. மண்டல அதிகாரி சமீர் வான்கடே இருந்து வருகிறார். இவர் மீது மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்டு வருகிறார். முதலில் பா.ஜனதா பிரமுகர் உள்பட இருவர் சமீர் வான்கடே உடன் சேர்ந்து கொண்டு ஷாருக்கானிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் என்றார். பின்னர், சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழ் போலியானவை என நவாப் மாலிக் குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை சமீர் வான்கடே சந்தித்து பேசினார். இந்த நிலையில் இன்று மகாராஷ்டிர மாநில கவர்னர் பகத் சிங் கோசியாரியை சமீர் வான்கடேயின் தந்தை, மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் சந்தித்து பேசினர்.

    சமீர் வான்கடேயின் தந்தை

    கவர்னரை சந்தித்தப்பின் சமீர் வான்கடேயின் தந்தை கூறுகையில் ‘‘என்னுடைய மருமகள், மகள் மற்றும் நான் ஆகியோர் கவர்னரை சந்தித்தோம். எங்களுடைய கோரிக்கைகளை அவரிடம் வழங்கினோம். எல்லாமே நல்லபடியாக நடக்கும் என கவர்னர் எங்களுக்கு உறுதி அளித்தார்’’ என்றார்.

    சமீன வான்கடேயின் மனைவி கிராந்தி ரேத்கர் ‘‘எங்களுக்கு நடந்த எல்லா விசயங்களையும் கவர்னரிடம் தெரிவித்தோம். அவரிடம் புகார் அளிக்க மட்டுமே சென்றோம் என்றால், அது அல்ல. நாங்கள், உண்மைக்கான போராட்டம். நாங்கள் அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்றோம். எங்களுக்கு கவர்னர் வலிமை மற்றும் உறுதி அளித்தார்’’ என்றார்.
    ஷாருக்கான மகன் போதை பொருள் பயன்படுத்தியதுடன், வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் உள்ளார்.
    சொகுசு கப்பல் போதை பொருள் விருந்து நிகழ்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதை பொருள் உட்கொண்டதுடன், வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டிய போதைபொருள் தடுப்புப்பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இரண்டு வாரங்கள் ஜெயலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.

    ஆர்யன் கான் மகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக், என்.சி.பி. அதிகாரி சமீர் வான்கடே மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். அவர் போலி சான்றிதழ் மூலம் பதவி பெற்றதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்த நிலையில், தற்போது ஆர்யன் கான் வழக்கு கடத்தல், பணம் பறித்தல் பற்றியது. இதற்கு பா.ஜனதாவின் மோகித் கம்போஜ் மூளையாக செயல்பட்டார் என புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதுகுறித்து நவாக் மாலிக் கூறுகையில் ‘‘ஆர்யன் கான் சொகுசு கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கவில்லை. பிராடிக் கபா மற்றும் அமிர் பர்னிச்சர்வாலா ஆர்யன் கானை கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். இது கடத்தல் மற்றும் அதன்மூலம் பணம் பறித்தல் விவகாரம். மோகித் கம்போஜ் இதற்கு மூளையாக இருந்து, சமீர் வான்கடேவுடன் பணம் பறிப்பதில் உடந்தையாக உள்ளார். 

    முதல் நாளில் இருந்தே ஷாருக்கான் மிரட்டப்பட்டுள்ளார். பணம் கைமாறிய குற்றச்சாட்டில் ஷாருக்கான் மானேஜர் பெயர் அடிப்பட்ட நாளில்  இருந்தே, இதுபற்றி வெளியில் கூறக்கூடாது என்று ஷாருக்கானிடம் கூறியுள்ளனர்.

    ஷாருக்கான் பொதுவெளிக்கு வந்து பேச வேண்டும். மகன் கடத்தப்பட்டால், பணம் கொடுப்பது குற்றம் அல்ல’’ என்றார்.
    ×